குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அதிக நேரம் கணினி மற்றும் மொபைல் திரைகளுக்கு முன்பாக அமர்ந்திருப்பது பிற்காலத்தில் அவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் எனப் புதிய ஆய்வு ஒன்றில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 90களில் பிறந்த குழந்தைகள் அதாவது 1991-92 க்கிடையில் பிறந்த பதினான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பங்கேற்றனர். அவர்கள் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டனர். இந்த ஆய்வின் முடிவில் குழந்தைகளின் திரைக்கு முன்பான […]
கனடியக் குழந்தைகள் மருத்துவச் சங்கம் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் மொபைல் மற்றும் கணினித் திரைகளில் செலவிட வேண்டாம் எனப் பரிந்துரைத்துள்ளது. மேலும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. கனடா நாட்டின் நரம்பியல் மற்றும் கற்றல் குறைபாடுகளுக்கான ஆராய்ச்சித் தலைவரும் உதவிப் பேராசிரியருமான எம்மா டுயர்டன் தலைமையில் நடைபெற்ற ஆய்வில், கோவிட்-19 தொற்றுநோய்க் காலத்தின்போது குழந்தைகள் வழக்கத்தை விட இரண்டு மடங்கு […]