முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மனித இனம் இப்போது மிகப்பெரிய அல்லாட்டத்திற்கு ஆளாகியுள்ளது. தேவையற்ற சபலம் மற்றும் முற்றிலுமான செக்ஸ் ஆசைக் குறைபாடு என்ற இரண்டு எல்லைகளுக்கு இடையில் நாம் இருக்கிறோம். சமூக வலைதளங்கள், ஆபாச வீடியோக்கள் மனிதர்களின் செக்ஸ் உந்துதலில் தேவையற்ற அழுத்தங்களை அளிக்கிறது. இன்னொருபக்கம் மோசமான உணவு வழக்கம் மற்றும் உறக்கச் சுற்று மனிதர்களின் சாதாரண செக்ஸ் வாழ்க்கையையே கடினமாக்கி உள்ளது. இந்த இரண்டு அதீத நிலையும் சரிசெய்யப்பட வேண்டியுள்ளது. எலிகளின் மீதான புதிய […]
சிட்னி பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட உலகின் முதல் சோதனையின்படி கடுமையான முதுகு மற்றும் கழுத்து வலிக்கு ஓபியாய்டுகள் தீர்வு அல்ல என்றும் அவை மிகவும் ஆபத்தானது என்றும் தெரிய வந்துள்ளது. இந்தச் சோதனையானது 157 முதன்மை பராமரிப்பு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுத் தளங்களிலிருந்த 350 பங்கேற்பாளர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. இவர்களில் திடீர் கழுத்து வலி மற்றும் முதுகு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தீவிர மற்றும் தொடர் கழுத்து வலி மற்றும் முதுகு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் அடங்குவர். இவர்கள் ஆறு வாரங்கள் தொடர்ந்து ஓபியாய்டுகள் […]
புகை பிடிப்பது எந்த முறையாக இருந்தாலும் ஆபத்தானதே.. குளிர் வாட்டும் மேலை நாடுகளில் புகை பிடிப்பதைக் கூட ஏதோ ஒரு வகையில் புரிந்துகொள்ளமுடிகிறது. வெயில் வாட்டி வதைக்கும் நம்மூரில் இவர்கள் வாயில் புகையோடு திரிவதை என்னவென்று சொல்வது..? போதாக்குறைக்கு நமது சினிமா ஹீரோக்கள் தங்கள் ஸ்டைலுக்கு நம்பி இருப்பது இந்த சிகரெட்டைத்தான். மேடைகளில் தங்கள் ரசிகர் நலனுக்காக வாய் கிழிய பேசிவிட்டு, திரையில் சிகரெட்டை தூக்கிப் போட்டு ஸ்டைலாக பிடிப்பார்கள். அதைப் பார்க்கும் நம்மவர்கள் தலைவன் வழியில் […]
மனிதன் கண்டுபிடித்த ஆகச்சிறந்த அழிவுப் பொருள் எது என்று கேட்டால், அது பிஸாஸ்டிக் என்றுதான் சொல்லவேண்டும். பிஸாஸ்டிக் இந்த உலகில் மண்ணை மட்டும் மலடாக்கவில்லை, மனித உடல்களையும் தடம் மாற்றுகிறது. சிறு சிறு துகள்களாக உடைந்து சிதைந்த மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இந்த பூமி முழுவதும் பரவிக் கிடக்கிறன. பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் கழிவுகள் மண்ணில் மழைநீரைச் சார விடாமல் தடுத்து மண்ணுக்கும் மண்ணைச் சார்ந்திருக்கும் நுண்ணுயிர்களுக்கும் பெரும் பாதிப்பை உண்டு செய்கிறது என்பது இத்தனை வருடங்களில் நாம் […]
முந்தானை முடிச்சு என்ற பாக்கியராஜின் படத்திற்குப் பிறகு முருங்கைக் காய்க்கு நம் ஊரில் மவுசு கூடிப்போனது. உண்மையில் முருங்கைக்காய்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறதா என்பது இன்னும் கேள்விக்குரியதுதான். ஆனால், ஆண்களின் விறைப்புக் குறைபாட்டிற்கும், விரைவில் சக்தியை இழக்கும் பிரச்சனைக்கும் நம்மிடம் உணவிலேயே தீர்வுகள் உள்ளன. நம் திருமணச் சடங்குகளில் புதுமணத் தம்பதிகளுக்கு அளிக்கப்படும் பாலும், பழமும், உளுந்து மற்றும் பயறு வகைகளில் செய்யப்படும் இனிப்புப் பண்டங்களும் தம்பதிகளின் நாவின் ருசிக்காக மட்டும் அளிக்கப்படுவதில்லை. ஆண்மையைத் தூண்டும், […]