இந்த ரயில் விபத்தில் 230க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிகின்றன. கிழக்கு இந்தியாவில் சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதியதில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடந்த விபத்தில் 179 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கே கொல்கத்தாவில் இருந்து தென்னிந்தியாவின் சென்னை வரை செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் எதிர் தண்டவாளத்தில் விழுந்ததாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.