முந்தைய தலைமுறை மண்ணில் புரண்டு விளையாடி, ஆற்றில் குளித்து, குளத்தில் நீந்தி, மரத்தடியில் கூட்டாஞ்சோறு சமைத்து வளர்ந்தது. நாகரீகம் மிகுந்து சொகுசு மலிந்திருக்கும் இந்த காலகட்டத்தில் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வருவதே பாதுகாப்பற்றது என்ற சூழல் உள்ளது. மாநகரங்களில் இருக்கும் பள்ளிக்கூடங்களில் மைதானங்களே இல்லை! தன் நாளில் பெரும்பகுதியைக் கழிக்கும் பள்ளிகளே வகுப்பறைகள் மட்டும் இருக்கும் சிறைச்சாலைகள் போல இருந்தால் அந்த பிள்ளைகள் எங்கே விளையாடுவார்கள், எப்படி ஆரோக்கியமாக வளர்வார்கள்..? புத்திசாலிக் குழந்தைகள் குறித்த புதிய […]
பெற்றோர்களாகிய நாம் எப்போதும் பிசியாக இருக்கிறோம். நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகத்தான் நாம் மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்கிறோம். உண்மை. அக்குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வீட்டில் உண்டாக்கி வைத்திருக்கிறோம். பொருளாதாரத்தில் எந்த நிலையில் இருந்தாலும், இன்றெல்லாம் அனைவருமே வீட்டில் மொபைல் போன் வைத்திருக்கிறோம். அதை நம் குழந்தைகள் கையில் கொடுத்து அவர்கள் அதை உபயோகப்படுத்தும் அழகை ரசிக்கிறோம். ஒருகட்டத்தில் மொபைல் போன் என்பது நம் குழந்தைகளைச் சாப்பிட வைக்க, அவர்கள் அழுது அடம்பிடிக்காமல் ‘சமத்தாக’ இருக்க, வீட்டை […]