சுமேரியர்கள் கண்டுபிடித்த கால அமைப்பு! ஐயாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்திவரும் மனித இனம்!!

வளர்ந்த மனிதர்களாகிய நமக்கு இப்பொழுது நேரம் பார்ப்பது பெரிய சிக்கலே இல்லை. ஆனால் நாம் குழந்தைகளாக இருந்தபோது நேரம் பார்ப்பதற்கு எத்தனை சிரமப்பட்டோம்! மொத்த கடிகாரமும் 60 நொடிகளாக பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு எண்ணும் ஐந்து நிமிடத்தால் பெருக்கப்பட வேண்டும்.. நாளின் இரண்டு பகுதிகள் 12 மணி நேரங்களாக பிரிக்கப்பட்டிருக்கும்.. உண்மையில் கடிகாரத்தின் தன்மையை விளக்குவது சிக்கலானதுதான்.
காலத்தைக் கணக்கிடும் முறைகளைக் கண்டறிந்த சுமேரியர்கள் கையாண்ட முறையைத்தான் நாம் இப்பொழுதும் கடைபிடித்து வருகிறோம் என்பது உண்மையில் ஆச்சரியமூட்டுவது. சுமேரியர்களின் எண் முறைகள் என்ன? தசம எண் (டெசிமல்) டுவோ டெசிமல் (12 ன் மடங்கு) மற்றும் செக்ஸாகெசிமல் (60 ன் மடங்கு) ஆகியவற்றின் தோற்றம் மற்றும் பயன்பாடு பற்றி இங்கு காண்போம்.
பத்து விரலும் மனிதனின் கணிதமும்!
மனிதன் எளிதாக டெசிமல் கணக்கை போடக்கூடியவன். அதாவது பத்தின் மடங்காக. ஏன் என்று தெரியுமா? அவனுக்கு பத்து விரல்கள் இருப்பதால்தான். அப்படி இருக்க, ஏன் நாம் மணி நேரங்களை 60 நிமிடங்களாகவும், ஒரு நாளை 24 மணி நேரங்களாகவும் பிரித்தோம். பத்தின் மடங்காகவோ அல்லது 12 ன் மடங்காகவோ ஏன் பிரிக்கவில்லை?! ஏனென்றால் பண்டைய சுமேரியர்கள் 60 என்ற எண்ணையே முழுமையான எண்ணாக கருதினார்கள். ஏன்?
60 என்ற எண்ணை 1, 2, 3, 4, 5, 6, 10, 12, 15, 20 மற்றும் 30 ஆகிய சம பாகங்களால் வகுக்க முடியும். மேலும், பண்டைய வானியலாளர்கள் ஒரு வருடத்தில் 360 நாட்கள் இருப்பதாக நம்பினர், இந்த எண் 60 ஆறு முறைகளுக்கு நேர்த்தியாக பொருந்துகிறது.
பண்டைய நாகரீகங்களில் நேரம்
பண்டைய நாகரிகங்கள் காலத்தை தோராயமாகத்தான் அளந்துகோண்டிருந்தன. சூரியன் உதிக்கும் போது ஒரு நாள் தொடங்கியது மற்றும் சூரியன் மறையும் போது இரவு தொடங்கியது. வாரங்கள், மாதங்கள் மற்றும் வருடங்கள் கடந்து செல்வது போன்ற அளவீடுகளை குத்து மதிப்பாகத்தான் அளவிட்டுக்கொண்டிருந்தனர்..
உண்மையில் ஒரு மாதம் என்பது ஒரு முழுமையான சந்திர சுழற்சியின் நீளம் , ஒரு வாரம் என்பது சந்திர சுழற்சியின் ஒரு கட்டத்தின் நீளம். மாறிவரும் பருவங்கள் மற்றும் சூரியனின் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு வருடத்தை மதிப்பிடலாம்.
சூரியனின் உச்சநிலை தீர்மானிக்கப்பட்டதும், அது மீண்டும் உச்சத்தை அடையும் வரை கடந்து சென்ற சூரிய உதயங்கள் / சூரிய அஸ்தமனங்களின் எண்ணிக்கையை அறிஞர்கள் கணக்கிட்டார்கள்.
இந்த முறையில், பண்டைய எகிப்தியர்கள் , மாயன்கள் மற்றும் பாபிலோனியர்கள் ஒரு ஆண்டு என்பது 360 நாட்கள் என்று தீர்மானித்தனர்.
ஆயினும் சுமேரிய வானியலாளர்கள் மற்றும் கணிதவியலாளர்கள் தான் முதன்முதலில் கால ஓட்டத்தை முறையாகப் பிரித்தனர். அவர்களின் கணக்கீடு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு யூரேசியா முழுவதும் பரவியது.
சுமேரியர்களின் காலக்கணக்கீட்டு முறை!
சுமேரியா என்பது தெற்கு மெசபடோமியாவில் (இன்றைய தெற்கு ஈராக்) அமைந்திருந்த ஒரு பழைய நாகரிகமாகும்.காலத்திற்கான அளவீட்டை 60 நொடிகளாகப் பிரித்ததும் சுமேரியர்களே.
சூரிய வருடத்தை காலகட்டமாக எடுத்துக்கொண்டு சுமேரியர்கள் 12 சந்திர மாதங்களும் 3 வருடங்களுக்கு ஒரு முறை 1 லீப் வருடத்தையும் கணக்கிட்டு நாள்காட்டியை வடிவைமைத்தார்கள். இதனை அடிப்படையாக கொண்டுதான் தற்போது நாம் பின்பற்றும் நிமிடங்கள், நொடிகள், மணி என்று கால அளவுகள் தோன்றின.
சுமேரியர்கள் 60 என்ற எண்ணை பெரிதும் சார்ந்திருந்தனர். ஏனெனில் அது எளிதில் வகுக்கக்கூடியது. 60 மற்றும் அதன் மடங்குகளுடன் கணக்கிடும்போது சில எச்சங்கள் மட்டும் இல்லை, தோன்றிய மீதிகள் மீண்டும் மீண்டும் தசமங்களைக் கொண்டிருக்கவில்லை (எ.கா. 1/3 = 0.333…),
சுமேரியர்களின் நிலம் கிமு 2400 இல் அக்காடியன்களால் கைப்பற்றப்பட்டது, பின்னர் கிமு 1800 இல் அமோரியர்களால் (பாபிலோனியர்கள்) கைப்பற்றப்பட்டது. ஒவ்வொரு அடுத்தடுத்த அரசுகளும் இந்த செக்ஸாகெசிமல் (60 அலகு) முறையை ஆதரித்ததோடு அதை தங்கள் சொந்த கணிதத்தில் இணைத்தது .
எனவே நேரத்தை 60 அலகுகளாகப் பிரிக்கும் வழக்கம் அப்படியே நீடித்து, பாரசீகம், இந்தியா, சீனா ஆகிய நாடுகளிலும் கிழக்கு நாடுகளுக்கும், எகிப்து, கார்தேஜ், ரோம் ஆகிய நாடுகளில் மேற்கு நாடுகளுக்கும் பரவியது.
இந்த கணக்கீட்டு முறை சீன வானியலாளர்களின் முறைகளோடு இணைந்து இன்னும் மெருகேறியது. நட்சத்திரங்களின் 12 வானியல் மணிநேரம் இரவு கண்காணிப்பை பல சீரான பகுதிகளாகப் பிரித்தது. எகிப்தியர்கள் ஒவ்வொரு இரவும் மூன்று கடிகாரங்களைப் பராமரித்தனர், ரோமானியர்களுக்கு நான்கு கடிகாரங்கள் இருந்தன.
கிரேக்க மற்றும் இஸ்லாமிய முன்னோடிகளின் கருத்துப்படி 360 என்பது பூமியின் சுற்றுப்பாதையின் நீளம் மட்டுமல்ல, ஒரு வட்டத்தின் சரியான அளவீடும் ஆகும். செக்ஸாகெசிமல் கணக்கீடு, கணிதம் மற்றும் வழிகாட்டும் கணக்கியலுக்கு (குறிப்பாக மாலுமிகள்) இன்றியமையாததாக மாறி வரலாற்றில் அதன் இடத்தை உறுதிப்படுத்தத் தொடங்கியது.
இறுதியாக, 14 ஆம் நூற்றாண்டில் வட்ட வடிவமான கடிகாரத்தை கண்டுபிடித்ததன் மூலம், ஒவ்வொரு நிமிடத்திற்கும் 60 வினாடிகளைக் கொடுக்கும் நேர்த்தியான, செக்ஸாகெசிமல் மனிதர்களின் அன்றாட பயன்பாட்டிற்கு வந்தது.
இன்று நாம் சாதாரணமாக பயன்படுத்தும் இந்த வட்ட வடிவ கடிகாரத்தின் தோற்றமும் வளர்ச்சியும் நமது வட்ட வடிவ புவிவட்டப்பாதையின் சிறிதாக்கப்பட்ட வடிவம் என்றால் மிகையில்லை. 60 என்ற எண்ணால் ஆளப்பட்ட சுமேரியர்களின் காலக்கணக்கீடு இத்தனை ஆண்டுகள் கழித்தும் மனிதர்களால் பயன்படுத்தப்படுவது ஆச்சரியம்தானே!