வந்தே விட்டன டிரைவரில்லா டாக்சிகள்! கலிபோர்னியாவில் அறிமுகப்படுத்தப்படும் ரோபோடாக்சிகள்…!!

தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. இன்னும் சில வருடங்களில் டிரைவர்கள் இல்லாமல் டாக்சிகள் ஓடக்கூடும் என்று சில நாட்களுக்கும் முன் செய்திகள் வந்தபோது நம்மில் பெரும்பாலானோர் நம்பவில்லை. டெஸ்லா தானியங்கி கார்கள் சாலைகளில் ஓடத்தொடங்கியபோது அனைவரும் ஆச்சரியமாகவே பார்த்தார்கள். பலரும் அந்த தொழில்நுட்பத்தை நம்பவில்லை.
இன்று, இதோ வந்தேவிட்டது ஆளில்லா டாக்சிகள்! ரோபோடாக்சி நிறுவனங்களான Waymo மற்றும் Cruise இப்போது சான் ஃபிரான்சிஸ்கோவில் 24 மணி நேரமும் ஓட்டுநர் இல்லாத சவாரிகளை வழங்க அனுமதி பெற்றுள்ளன.
இப்போது வரை, இந்த இரண்டு தன்னாட்சி சவாரி-வழங்கும் நிறுவனங்களும் நகரத்தில் கட்டுப்படுத்தப்பட்ட சேவையை வழங்க முடிந்தது. ஆனால் கடந்த வியாழன் அன்று கலிபோர்னியா பொது பயன்பாட்டு ஆணையம் (CPUC) அந்த கட்டுப்பாடுகளை நீக்கும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்தது.
ரோபோ டாக்ஸி துறையின் முன்னோடிகள்!
2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் CPUC ஒரு நெறிப்படுத்தும் திட்டத்தை அறிவித்தது. கலிபோர்னியா ரோபோடாக்ஸி செயல்பாடுகளை அங்கீகரிப்பதற்கான புதிய வழி அப்போது உருவானது. Waymo மற்றும் Cruise ஆகிய இரு நிறுவனங்களும் நகரத்தை சுற்றி ஓட்டுவதற்கு சோதனை அனுமதிகளைப் பெற்றனர். பிறகு, 2021 இல் இருவரும் பாதுகாப்பான ஓட்டுநர் இல்லாத டாக்சி சேவையைத் தொடங்க அனுமதி கோரி விண்ணப்பித்தனர்.
இதுவரை, வாகனத்தில் பாதுகாப்பு ஓட்டுநர் இருந்தால் மட்டுமே, சான் பிரான்சிஸ்கோவில் சவாரிகளுக்கு Waymo அனுமதிக்கப்பட்டது; பாதுகாப்பு ஓட்டுனர் இல்லாமல் எந்த நேரத்திலும் பணம் செலுத்தாத சவாரிகள் நடக்கலாம்.
குரூஸ் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையில் ஒரு பாதுகாப்பு டிரைவர் உடனிருக்க, ஓட்டுநர் இல்லாத பயணங்களுக்கு அனுமதிக்கப்பட்டது. இப்போது, குரூஸ் மற்றும் Waymo இரண்டு நிறுவனங்களும் நகரம் முழுவதும், இரவு அல்லது பகலாக செயல்பட அனுமதி உள்ளது. ஆறரை மணி நேர விசாரணைக்குப் பிறகு மூன்றுக்கு ஒன்று என்ற வாக்கெடுப்பில் CPUC தீர்மானங்களை அங்கீகரித்தது.
“மனித ஓட்டுநர்கள் ஓட்டும் தரநிலைக்கு நிகராக, தன்னாட்சி வாகனங்கள் பற்றிய தரவுகள் எங்களிடம் இன்னும் இல்லை என்றாலும், சாலையில் பாதுகாப்பை அதிகரிக்க இந்தத் தொழில்நுட்பத்தின் திறனை நான் நம்புகிறேன்” என்று CPUC கமிஷனர் ஜான் ரெனால்ட்ஸ் கூறினார்.
“தொழில்துறையில் முக்கிய பங்குதாரர்களுக்கும் பயாளர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு இந்த புதுமையான, வளர்ந்து வரும் தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்ப்பதில் இன்றியமையாததாக இருக்கும்.”
களத்தில் எழும் எதிர்ப்புக்குரல்கள்..
Waymo மற்றும் குரூஸ் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதை எதிர்த்து ஏராளமான குரல்கள் எழுந்தன. குழப்பமான தன்னியக்க வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்து நமக்கு போதிய தரவுகள் இல்லை.
தன்னாட்சி வாகனங்களின் சக்கரங்களில் ராட்சத ரிங் கேமராக்கள் பொருத்துதல் போன்ற சட்ட அமலாக்க திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.
சான் பிரான்சிஸ்கோ நகர ஏஜென்சிகளும் இந்த தானியங்கி வாகனுங்களுக்கான அனுமதிகளை எதிர்த்தன, ஆனால் ரோபோடாக்ஸி நிறுவனங்கள் ஊனமுற்றோர் ஆதரவு ஆர்வலர்கள் உட்பட ஏராளமான நிறுவனங்களின் ஆதரவைப் பெற்றன. இந்த இரு நிறுவனங்களின் பயணிகள் பாதுகாப்புத் திட்டங்களில் CPUC திருப்தி அடைந்தது.
டாக்சி சேவையில் ஒரு மைல் கல்!
சான் பிரான்சிஸ்கோ முழுவதும் வணிகரீதியான, 24/7 ஓட்டுநர் இல்லா டாக்சி சவாரி சேவையை வழங்குவது இந்த டாக்சி சேவைத் துறையில் ஒரு மைல்கல் ஆகும். இது பாரம்பரிய டாக்சி சேவைத்துறையுடன் போட்டியிடுவதற்கும், பாதுகாப்பான டாக்சி சேவையை வழங்குவதற்கும் வழி ஏற்படுத்துகிறது.
“முக்கிய பங்குதாரர்களுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுவோம், மேலும் நாங்கள் எங்கள் சேவையை மேலும் பலருக்கு விரிவுபடுத்துகிறோம்,” என்று குரூஸில் உலகளாவிய அரசாங்க விவகாரங்களின் VP பிரசாந்தி ராமன் கூறினார்.
“இந்த தானியங்கி டாக்சிக்கான அனுமதி சான் பிரான்சிஸ்கோவில் எங்கள் வணிக நடவடிக்கைகளின் உண்மையான தொடக்கத்தைக் குறிக்கிறது. CPUC மற்றும் எங்கள் சேவையை ஆதரித்த சமூகங்கள் மற்றும் ரைடர்களின் இந்த நம்பிக்கைக்கிற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.” என்று Waymo இன் இணை-CEO, Tekedra Mawakana கூறினார்.
இத்தகைய தானியங்கி டாக்சிகள் நம் ஊருக்கு வர இன்னும் எத்தனை காலம் ஆகுமென்று தெரியவில்லை. பைக் டாக்சிகள் சேவை அறிமுகப்படுத்தப்பட்டபோதே இங்கு ஆட்டோ ஓட்டுனர்கள் பெரும் கலவரங்களில் ஈடுபட்டனர். இன்று வரை பைக் டாக்சி ஓட்டுநர்களுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பிரச்சனை நிலவி வருகிறது. இப்படி இருக்கையில், முழுவதுமாக டிரைவர்களே இல்லாத டாக்சி சேவைகளை நம்மூரில் வழங்க இயலுமா என்பது சந்தேகம்தான்.