fbpx
LOADING

Type to search

இலங்கை தெரிவு பல்பொருள்

வெகுஜன புதைகுழிகள் தொடர்பான நம்பகமான விசாரணையை வலியுறுத்தி இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கடையடைப்புப் போராட்டம்!!

செய்தி சுருக்கம்:

முல்லைத்தீவின் வடகிழக்கு மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெகுஜன புதைகுழி தொடர்பாக நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை கடையடைப்பு நடத்தப்பட்டது. 

வெகுஜன புதைகுழிகளின் விவரங்கள்: 

இதுவரை இலங்கை முழுவதும் சுமார் 20 வெகுஜன புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

இடங்களும் அடைப்புக்குறிக்குள் வெகுஜன புதைகுழிகளின் எண்ணிக்கையும் : யாழ்ப்பாணம் (3), கிளிநொச்சி (2), முல்லைத்தீவு (2), மன்னார் (2), மற்றும் மட்டக்களப்பு (1) இவை அனைத்தும் புலிகளினுடனான போர் நிகழிடங்கள்.  கண்டி (1), குருநாகல். (1), மாத்தளை (1), கம்பஹா (3), கொழும்பு (2), மாத்தறை (1) மற்றும் இரத்தினபுரி (1), இவை அனைத்தும் சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள். 

ஜூன் மாதம், கொக்குதுடுவையில் தேசிய நீர் சபை ஊழியர்களால், அந்தப் பகுதியில் அபிவிருத்தித் திட்டத்திற்காக அகழ்வுப் பணிகளை மேற்கொண்டிருந்த போது தற்செயலாக பாரிய புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. ஜூலை 6 ஆம் திகதி, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையில், பாரிய புதைகுழி தோண்டப்பட்டதாகக் கூறப்பட்டது. குறைந்தது 13 பேரின் மனித எச்சங்கள் அங்கு காணப்பட்டதாக தமிழ் அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

போராட்டம் நடைபெற்ற இடங்கள்: 

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வீடுகளுக்குள்ளேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களின்படி, தொடர்ந்து நடந்த உள்நாட்டுப் போர் மற்றும் கலவரங்களால் குறைந்தது 100,000 உயிர்கள் பலியாகியுள்ளன, மேலும் 20,000 க்கும் அதிகமானோர் காணமல் ஆக்கப்பட்டுள்ளனர். 

யாழ்.பல்கலைக்கழகத்தின் ஒன்றிணைந்த மாணவர் அமைப்பு அறிக்கையொன்றில் இந்த பணிநிறுத்தப் போராட்டத்திற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. எனினும் வவுனியா, அமபாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் போராட்டம் வெற்றியளிக்கவில்லை.

வெகுஜன புதைகுழிகள் உருவாக காரணமானவர்கள் குறித்த விசாரணைகள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகள் முழுவீச்சில் தொடங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அடையாளம் காணப்பட்ட எச்சங்களை அவர்களின் குடும்பங்களுக்கு விரைந்து திருப்பித் தரவேண்டும்.  

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *