உலகமெங்கும் கிளர்ந்தெழும் இந்திய வம்சாவளி நிறுவனத் தலைவர்களைக் கண்டு அசந்து போயிருக்கும் ‘எலான் மஸ்க்’..!!

செய்தி சுருக்கம்:
சமீபத்தில் வேர்ல்டு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் (World of Statistics) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு பட்டியலில், உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்கள் இப்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரியால் வழிநடத்தப்படுகின்றன என்று சொல்லப்பட்டது. இதில் ஆல்பபெட் தலைவர் சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட், யூடியூப் மற்றும் அடோப் ஆகிய நிறுவனங்களும், சத்யா நாதெள்ளா, நீல் மோகன் மற்றும் சாந்தனு நாராயண் ஆகியோர் தொழில்நுட்ப ஜாம்பவான்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் இன் தலைவரும், ‘எக்ஸ்’ (முன்னர் ட்விட்டர்) உரிமையாளருமான எலோன் மஸ்க், உலகாவிய அளவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த CEO களின் எண்ணிக்கையைக் கண்டு வியந்துபோயுள்ளார்.
வேர்ல்டு ஆப் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் என்ற நிறுவனம் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில், இந்திய வம்சாவளியினர் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து உலகின் ஆகச்சிறந்த நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளில் இருப்பது தெரியவந்துள்ளது.
வியந்த எலான் மஸ்க்!
.உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்கள் இப்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரியால் வழிநடத்தப்படுகின்றன என்று இந்த பட்டியல் காட்டுகிறது. இதில் ஆல்பபெட் தலைவர் சுந்தர் பிச்சை , மைக்ரோசாப்ட், யூடியூப் மற்றும் அடோப் ஆகிய நிறுவனங்களும், சத்யா நாதெல்லா, நீல் மோகன் மற்றும் சாந்தனு நாராயண் ஆகியோர் தொழில்நுட்ப ஜாம்பவான்களும் இடம்பெற்றுள்ளனர்.
உலக வங்கி குழுமத்தின் 14வது தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அஜய் பங்கா இந்த பட்டியலில் சமீபத்தில் சேர்ந்தவர் ஆவார்.
இந்த பட்டியலில் முறையே ஸ்டார்பக்ஸ், காக்னிசன்ட் மற்றும் மைக்ரோன் டெக்னாலஜியின் தலைவர்களான லக்ஷ்மன் நரசிம்மன், ரவி குமார் எஸ் மற்றும் சஞ்சய் மெஹ்ரோத்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பிரெஞ்சு சொகுசு பேஷன் ஹவுஸ் சேனலின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரியான லீனா நாயர், உலகெங்கிலும் உள்ள இந்திய வம்சாவளி கார்ப்பரேட் முதலாளிகளின் வரிசையில் இடம்பெற்றுள்ளார்.
மற்ற நிறுவனங்களில் Albertsons, NetApp, Palo Alto Networks, Arista Networks, Novartis, Honeywell, Flex, Wayfair, OnlyFans, Motorola Mobility மற்றும் Vimeo ஆகியவை அடங்கும்.
முன்பு டிவிட்டர் என்றழைக்கப்பட்ட ‘எக்ஸ்’ இல் உள்ள இந்த பட்டியலுக்கு தனது கருத்தைத் தெரிவித்திருக்கும் எலான் மஸ்க், “இம்ப்ரஸிவ்” என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் டெஸ்லா கார் தொழிற்சாலை!
இதற்கிடையில், எலோன் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஒரு ‘புதிய $24,000 கார்’ தயாரிக்க ஒரு தொழிற்சாலையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த மாதம் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து திட்டங்கள் குறித்து ஆலோசிப்பார்கள் என்று கூறப்படுகிறது. புதிய வாகனம் அதன் தற்போதைய குறைந்த விலையை விட 25% குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி ஜூன் மாதம் நியூயார்க்கில் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கை சந்தித்தார். சந்திப்பிற்குப் பிறகு, எலோன் மஸ்க், ‘ நான் பிரதமர் நரேந்திர மோடியின் ரசிகன். அவர் இந்தியாவுக்கு சரியானதைச் செய்ய விரும்புகிறார்’ என்று கூறினார்.
நியூயார்க்கில் மோடியைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மஸ்க், ‘இந்தியாவில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்ய டெஸ்லாவை வலியுறுத்தி வருவதால், இந்தியப் பிரதமர் இந்தியா மீது உண்மையிலேயே அக்கறை காட்டுகிறார்’ என்றார்.