fbpx
LOADING

Type to search

இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவாவை பதவி விலகுமாறு பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்கள் கோரிக்கை

காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் தாய்கள் கடந்த ஜூன் 08 ஆம் திகதி தமது தொடர் போராட்டத்தின் 2300th ஆவது நாளைக் குறிக்கும் வகையில் பின்வரும் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர்.

“காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் பிள்ளைகளைக் கண்டுபிடிக்கவும், இலங்கையில் சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலையில் இருந்து அனைத்து தமிழர்களையும் காப்பாற்றும் வகையில், தமிழ் இறையாண்மையை அடைய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைக் கோரவும் நாம் தொடர்ந்து போராடும் போராட்டத்தின் 2300வது நாள் இன்றாகும்,

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவாவின் கீழ், இந்த அமைப்பு இலங்கைக்கு வழங்கும் நிதி, தமிழர்களுக்கு எதிரான இடைவிடாத ஆக்கிரமிப்புக்கும் ஒடுக்குமுறைக்கும் சேவை செய்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பின் பின்னர் இலங்கை இராணுவமும் பௌத்த பிக்குகளும் தமிழர்களிடம் இருந்து பலவந்தமாகவும் சட்டவிரோதமாகவும் காணிகளை அபகரித்து பௌத்த சிங்கள மக்கள் வாழாத தமிழர் தாயகம் முழுவதும் மகாசங்க சிங்கள பௌத்த சின்னங்களை அமைத்து .

தமிழர்களின் சுதந்திரத்தை அழிக்கவும், தமிழர்களின் இருப்பை அவர்களது சொந்த மண்ணில் இருந்து அழிக்கவும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவி வருகிறது என்பதே யதார்த்தம்.

எனவே சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

தொடர்புடைய பதிவுகள் :

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் ஶ்ரீலங்கா காவல் துறையால் கைது
கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவர இலங்கை அரசுக்கு உலகவங்கி 700 மில்லியன் டாலர்கள் நிதிய...
இலங்கையின் பல்வேறு தரப்பினருடன் பிரித்தானிய அதிகாரி பேச்சு
இலங்கையில் பௌத்த மதத்தை அவமதித்ததாக கூறி நகைச்சுவையாளர் கைது
இலங்கைக்கு செல்லும் வழியில் கடலில் கொட்டப்பட்ட தங்கத்தை இந்தியா மீட்டது!
இலங்கை ஜனாதிபதி மாளிகை சூரையாடப்பட்டபோது பியானோ வாசித்த போலீஸ் அதிகாரி பணிநீக்கம் ..!!
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மின்சார இணைப்பு! திட்டங்களை புதுப்பிக்கும் முயற்சியில் இருதரப்ப...
மாகாணத் தேர்தல்களை நடத்த விக்கிரமசிங்கேவிடம் மோடி வலியுறுத்த வேண்டும் - இலங்கை தமிழ்ச் சமூகம் மோடியி...
இலங்கைக்கான முதலாவது சர்வதேசக் கப்பல் சேவையை இந்தியா ஆரம்பித்து வைத்துள்ளது
யாழ்ப்பாணம் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த ஐந்து லட்சுமி நாணயங்கள்!!
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *