தமிழக முதல்வர் FinTech நகர திட்டத்தை தொடங்கிவைத்தார்

செய்தி சுருக்கம்:
சென்னையில் உள்ள Fintech City மற்றும் Fintech Tஒநெர் திட்டங்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினார். இது சென்னை வர்த்தக மையத்தை ஒட்டி கட்டப்பட்டு வருகிறது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
12,000 கோடி முதலீட்டுத் திறனுடன் 56 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட Fintech City, சர்வதேச மற்றும் தேசிய BFSI நிறுவனங்களுக்கு இடமளித்து, 80,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிக்கும்.
பின்னணி:
1682 ஆம் ஆண்டு மாநிலத்தின் முதல் வங்கியான தி மெட்ராஸ் வங்கியை நிறுவியதன் மூலம் நிதிச் சேவைத் துறையில் தமிழ்நாடு ஒரு வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான தமிழ்நாடு உலகின் தலைசிறந்த 500 நிதி நிறுவனங்களில் 250 ஐயும் 100 க்கும் மேற்பட்ட FinTech ஸ்டார்ட்அப்களையும் (Start Up) கொண்டுள்ளது.