fbpx
LOADING

Type to search

இந்தியா உடல் நலம் தெரிவு பல்பொருள்

இருமல் மருந்தால் இறந்த குழந்தைகள்! உற்பத்தி உரிமத்தை ரத்து செய்தது இந்தியா!!

செய்தி சுருக்கம்:

காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் குழந்தை இறப்புகளுடன் தொடர்புடைய இருமல் சிரப்கள் மாசுபட்டதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, QP Pharmachem Ltd இன் உற்பத்தி உரிமத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இந்தியாவின் வடக்கு பஞ்சாப் மாநிலத்தை தளமாகக் கொண்ட QP Pharmachem Ltd தயாரித்த  இருமல் மருந்தின் மாதிரிகளில், உட்கொள்ளும் போது மனிதர்களுக்கு நச்சுத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் ஆகியவை காணைப்பட்டதாக WHO புகாரளித்துள்ளது. இந்நச்சுப் பொருட்கள் மனிதர்களில் மரணத்தை விளைவிக்கக் கூடிய அளவு மோசமான அளவுகளில் இந்த இருமல் மருந்துகளில் காணப்பட்டதாம். 

இந்திய அரசின் அறிவிப்பு

இந்திய துணை சுகாதார அமைச்சர் பாரதி பிரவின் நாடாளுமன்றத்தில் கூறுகையில், “இந்த மருந்து நிறுவனங்களில் இருந்து எடுக்கப்பட்ட மருந்து மாதிரிகள்… தரமானதாக இல்லை என அறிவிக்கப்பட்டது. QP Pharmachem Ltd மற்றும் பிற இரண்டு நிறுவனங்களின் உற்பத்தி உரிமங்கள், குழந்தை இறப்புகளுடன் தொடர்புடைய தயாரிப்புகள் – Maiden Pharmaceuticals மற்றும் Marion Biotech Pvt. லிமிடெட் – இடைநிறுத்தப்பட்டுள்ளது மற்றும் அவற்றின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது” என்றார். 

மருந்து நிறுவனம் கூறுவதென்ன?

இருப்பினும், மருந்து நிறுவனம் தவறை மறுத்தது மற்றும் இடைநீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது.  Maiden Pharmaceuticals மற்றும் Marion Biotech ஆகியவை எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளன.

கியூபி பார்மாசெம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுதிர் பதக், உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இடைநீக்க உத்தரவுக்கு எதிராக, அரசாங்கத்திடம் மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார் .

குயீபெனெசின் டிஜி என்று பெயரிடப்பட்ட இருமல் மருந்தில் பயன்படுத்தப்படும் பொருட்களை அதன் உற்பத்தியைத் தொடங்குவதற்கு முன்பு சோதனை செய்ததாக பதக் கூறினார். அவர் கம்போடியாவிற்கு மட்டுமே தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததாகவும், அது மஷால் தீவுகள் மற்றும் மைக்ரோனேஷியாவை எவ்வாறு சென்றடையும் என்று உறுதியாக தெரியவில்லை என்றும் கூறினார்.

மோசமான இருமல் மருந்துகளை உலகெங்கும் அனுப்பும் இந்தியா!

இந்த ஆண்டு ஜூன் மாதம், உலக சுகாதார நிறுவனம் , உலகம் முழுவதும் அசுத்தமான இருமல் சிரப் விநியோகம் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வில் ஏழு தயாரிப்புகள் இந்தியாவில் இருந்து அனுப்பப் பட்டிருப்பதைக் கண்டறிந்து எச்சரித்தது. 

WHO மொத்தம் இருபது நச்சு மருந்துகளைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. அதன் நுகர்வு உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட இறப்புகளுக்கு வழிவகுத்துள்ளது. பட்டியலில் உள்ள மீதமுள்ள மருந்து தயாரிப்புகள் இந்தோனேசியாவிலிருந்து வந்தவை. 

ஹரியானாவைச் சேர்ந்த மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ், மரியான் பயோடெக் மற்றும் க்யூபி பார்மா கெம் ஆகியவை இந்த நச்சு மருந்துகளின் முக்கிய உற்பத்தியாளர்கள். 

WHO எச்சரிக்கையும் இந்தியாவின் நடவடிக்கைகளும்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாசுபடுத்தப்பட்ட மருந்துகளுக்கு WHO எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை இந்த விஷயத்தில் முழு விசாரணை முடிந்த பிறகு பட்டியல் வந்துள்ளது.

WHO வின் இந்த எச்சரிக்கைக்கு பதில் நடவடிக்கையாக, ஜூன் மாதம் முதல் இருமல் சிரப் ஏற்றுமதிக்கான சோதனையை இந்தியா கடுமையாக்கியுள்ளது. தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கு முன் நிறுவனங்கள் அரசு ஆய்வகத்திலிருந்து பகுப்பாய்வுச் சான்றிதழைப் பெறுவதைக் கட்டாயமாக்குகிறது.

தொடர்புடைய பதிவுகள் :

2023 செப்டம்பரில் நிகழவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய மல்யுத்த வீரர்கள் இந்திய அடையாளத்துடன...
ஆசிய பசிபிக் நாடுகளின் மிக வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெ...
ஸ்மார்ட் போனில் மூழ்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்துகள்: ஒரு எச்சரிக்கை
வானிலையின் அரிதான நிகழ்வால் இந்தியாவின் வடக்கு பிரதேசங்களில் தொடர் பெருமழை - இது காலநிலை மாறுபாட்டின...
மனு எழுதுவது எப்படி...?
ஐரோப்பாவில் 61,000  பெயரைக் கொண்ட கோடை வெப்பம்!  உலக வெப்பமயமாதலின் கோர முகம்!!
Electronic Tamil Meaning
காவல்துறையில் புகார் அளிப்பது எப்படி?
சிங்களத் திரைப்படங்களைத் தயாரிக்கப்போகும் லைகா புரொடக்ஷன்ஸ்..!!
Regret Meaning in Tamil 
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *