முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மனித இனம் இப்போது மிகப்பெரிய அல்லாட்டத்திற்கு ஆளாகியுள்ளது. தேவையற்ற சபலம் மற்றும் முற்றிலுமான செக்ஸ் ஆசைக் குறைபாடு என்ற இரண்டு எல்லைகளுக்கு இடையில் நாம் இருக்கிறோம். சமூக வலைதளங்கள், ஆபாச வீடியோக்கள் மனிதர்களின் செக்ஸ் உந்துதலில் தேவையற்ற அழுத்தங்களை அளிக்கிறது. இன்னொருபக்கம் மோசமான உணவு வழக்கம் மற்றும் உறக்கச் சுற்று மனிதர்களின் சாதாரண செக்ஸ் வாழ்க்கையையே கடினமாக்கி உள்ளது. இந்த இரண்டு அதீத நிலையும் சரிசெய்யப்பட வேண்டியுள்ளது. எலிகளின் மீதான புதிய […]
பள்ளி கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா பயன்பாடு எந்த தலைமுறையும் தாண்டி இப்போது அதிகமாக உள்ளது. பெரிய ஐடி கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்களில் இருந்து அன்றாடம் கூலி வேலை பார்ப்பவர்கள் வரை கஞ்சா பயன்பாடு தலை விரித்தாடுகிறது. ஜாயிண்ட், டொப்பி என்று பட்டப் பெயர்கள் வைத்து அழைக்கப்படும் கஞ்சா உடலில் உலோக நஞ்சைக் கலக்கிறது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சமீபத்திய ஆய்வில், கஞ்சா பயன்படுத்தாதவர்களைக் காட்டிலும் கஞ்சா பயன்படுத்துபவர்களின் இரத்தத்திலும் சிறுநீரிலும் ஈயம் மற்றும் […]
புகை பிடிப்பது எந்த முறையாக இருந்தாலும் ஆபத்தானதே.. குளிர் வாட்டும் மேலை நாடுகளில் புகை பிடிப்பதைக் கூட ஏதோ ஒரு வகையில் புரிந்துகொள்ளமுடிகிறது. வெயில் வாட்டி வதைக்கும் நம்மூரில் இவர்கள் வாயில் புகையோடு திரிவதை என்னவென்று சொல்வது..? போதாக்குறைக்கு நமது சினிமா ஹீரோக்கள் தங்கள் ஸ்டைலுக்கு நம்பி இருப்பது இந்த சிகரெட்டைத்தான். மேடைகளில் தங்கள் ரசிகர் நலனுக்காக வாய் கிழிய பேசிவிட்டு, திரையில் சிகரெட்டை தூக்கிப் போட்டு ஸ்டைலாக பிடிப்பார்கள். அதைப் பார்க்கும் நம்மவர்கள் தலைவன் வழியில் […]
மனிதன் கண்டுபிடித்த ஆகச்சிறந்த அழிவுப் பொருள் எது என்று கேட்டால், அது பிஸாஸ்டிக் என்றுதான் சொல்லவேண்டும். பிஸாஸ்டிக் இந்த உலகில் மண்ணை மட்டும் மலடாக்கவில்லை, மனித உடல்களையும் தடம் மாற்றுகிறது. சிறு சிறு துகள்களாக உடைந்து சிதைந்த மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இந்த பூமி முழுவதும் பரவிக் கிடக்கிறன. பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் கழிவுகள் மண்ணில் மழைநீரைச் சார விடாமல் தடுத்து மண்ணுக்கும் மண்ணைச் சார்ந்திருக்கும் நுண்ணுயிர்களுக்கும் பெரும் பாதிப்பை உண்டு செய்கிறது என்பது இத்தனை வருடங்களில் நாம் […]
செய்தி சுருக்கம்: இல்லற வாழ்வு சலிக்கும்போது திருமணத்தை மீறிய உறவுகள் உருவாகின்றன. திருமணமாகி எத்தனை ஆண்டுகள் கழித்து தம்பதியருக்குள் சலிப்பு எட்டிப் பார்க்கிறது; எப்போது திருமண பந்தத்தை விட்டு வெளியே மற்றொரு உறவை அவர்கள் நாடுகிறார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் பல்வேறு தகவல்கள் தெரிய வந்துள்ளன. உண்மையில் திருமண வாழ்வு கசக்குமா என்ற கேள்விக்கு இந்த ஆய்வு பதில் தருகிறது. ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? திருமணத்தை மீறிய உறவுகள் சட்டத்திற்குப் புறம்பான செயல்களாகவே […]