பரந்த அளவிலான வர்த்தகம் மற்றும் பொருளாதார அளவுருக்களில் இந்தியா, சீனாவை விட 16.5 ஆண்டுகள் பின்தங்கியிருப்பதாகப் பிரபல தரகு நிறுவனமான பெர்ன்ஸ்டீனின் சமீபத்திய ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பிசினஸ் ஸ்டாண்டர்ட் தெரிவித்துள்ளது. காப்புரிமை, அந்நிய நேரடி முதலீடு, அந்நியச் செலாவணி இருப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களைப் பகுப்பாய்வு செய்த பெர்ன்ஸ்டீன் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான இந்த இடைவெளியைத் தெரிவித்துள்ளது. காப்புரிமையைப் பொறுத்தவரை, இந்தியா சீனாவை விட 21 ஆண்டுகள் பின்தங்கியிருப்பதாக அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. அந்நிய நேரடி […]
சிட்னி பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட உலகின் முதல் சோதனையின்படி கடுமையான முதுகு மற்றும் கழுத்து வலிக்கு ஓபியாய்டுகள் தீர்வு அல்ல என்றும் அவை மிகவும் ஆபத்தானது என்றும் தெரிய வந்துள்ளது. இந்தச் சோதனையானது 157 முதன்மை பராமரிப்பு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுத் தளங்களிலிருந்த 350 பங்கேற்பாளர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. இவர்களில் திடீர் கழுத்து வலி மற்றும் முதுகு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தீவிர மற்றும் தொடர் கழுத்து வலி மற்றும் முதுகு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் அடங்குவர். இவர்கள் ஆறு வாரங்கள் தொடர்ந்து ஓபியாய்டுகள் […]
இலங்கையின் இருபெரும் இனங்களான சிங்களவர்களும் இலங்கைத் தமிழர்களும் மரபணு ரீதியாக ஒருவருக்கொருவர் மிகவும் ஒத்துப் போகிறார்கள் எனச் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் மொழி வேறுபாடுகள் இவ்விரண்டு இனங்களுக்கிடையே இருந்தபோதும் பல நூறு ஆண்டுகளாக இணைந்திருப்பதால் இந்த மரபணுத் தொடர்பு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்தியா மற்றும் இலங்கையைச் சார்ந்த டிஎன்ஏ விஞ்ஞானிகளால் கூட்டாக நடத்தப்பட்ட இந்த ஆய்வு குறித்த செய்தி ஐசயின்ஸ் என்னும் இதழில் வெளியாகியுள்ளது. இதில் இலங்கையில் உள்ள இனக்குழுக்களின் […]
“அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் தலைவர் வேட்பாளர் விவேக் ராமசாமி தனது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக எனது இசையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்”, என்று ராப் சூப்பர்ஸ்டார் எமினெம் கோரியுள்ளார். இசை நிறுவனமான பிஎம்ஐ கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி எழுதியுள்ள கடிதத்தில் எமினெம்மின் இசையைப் பயன்படுத்துவதற்கான உரிமத்தை இனி விவேக் ராமசாமியின் பிரச்சாரத்திற்கு வழங்க மாட்டோம் எனக் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து விவேக் ராமசாமி, மார்ஷல் மாதெர்ஸ் III என்ற இயற்பெயரைக் கொண்ட எமினெம்மின் கோரிக்கைக்கு […]
இன்று உலகம் முழுவதிலும் ஏ.ஐ எனும் செயற்கை நுண்ணறிவு பற்றிய பேச்சுத்தான் அதிகமாக உள்ளது. அதன் ஆற்றலையும் அதிவேகமான பாய்ச்சலையும் கண்டால் மிகவும் வியப்பாகவே உள்ளது. சாட் ஜிபிடி, கூகுள் பார்ட் போன்ற சாட்பாட் உதவியால் பல்வேறு துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. மருத்துவம், பாதுகாப்பு, வணிகம், நிதி, சட்டம், வங்கி, போக்குவரத்து, உற்பத்தி என அனைத்துத் துறைகளிலும் இன்று ஏ.ஐ என்று சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவு கோலோச்சி வருகிறது. மனிதனைப் போலவே சிந்தித்துப் […]